விலங்குகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை : அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி
விலங்குகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை : அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன் : அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் திறக்கப்பட்டுள்ள மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு வனவிலங்கு காட்சி சாலைகளும் பூங்காக்களும் மூடப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அட்லாண்டா நகர் மையத்தில் 30,000 சதுர கிமீ பரப்பளவில் இலுமினாரியம் எனப்படும் மெய்நிகர் வனவிலங்கு காட்சி சாலை திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் சுமார் 20 அடிக்கு சுவர் எழுப்பப்பட்டு அதில் ப்ரொஜெக்டர் மூலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் உலாவும் காட்சிகள் போடப்படுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக